Published : 03 Apr 2015 09:36 AM
Last Updated : 03 Apr 2015 09:36 AM
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம், தொகுப்பூதிய முறையை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம், 8 மணிநேர வேலை, மிகை நேரப் பணிக்கு மிகை நேரப்படி வழங்குதல், வார விடுமுறை, கடைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தருதல், ஊழியர் பணியின்போது இறந்தால் குடும்பத்தாருக்கான நிதிப்பயன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஏ.இ.பழனிச்சாமி தலைமை வகித்தார். அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் கு.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியன், பொதுச் செயலாளர் உ.மா.செல்வராஜ், மாநில அரசுப் பணியாளர் சம்மேளன தேசியக் குழு உறுப்பினர் ம.பரமசிவம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT