Published : 13 Apr 2015 10:03 AM
Last Updated : 13 Apr 2015 10:03 AM

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்: 10,000 பெண்கள் பங்கேற்பு

பாரத ஸ்டேட் வங்கி நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

பாரத ஸ்டேட் வங்கி (சென்னை வட்டாரம்) சார்பில் ‘பெண்கள் உடல் நலன் காத்தல் மற்றும் மார்பக புற்றுநோய் விழிப் புணர்வு ஓட்டம்’ சென்னை தீவுத்திடலில் நேற்று காலை 6 மணிக்கு நடந்தது. 3 கிமீ, 5 கிமீ மற்றும் 10 கிமீ என 3 பிரிவுகளில் நடந்த இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை பாரத ஸ்டேட் வங்கியின் (சென்னை வட்டாரம்) தலைமை பொது மேலாளர் பி.எஸ்.பிரகாஷ் ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொது மேலாளர்கள் தீபக்குமார், ஜி.ரீட்டா ஆகியோர் உடன் இருந்தனர்.

பாரத ஸ்டேட் வங்கியின் பெண் ஊழியர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியைகள், மாணவிகள், மாற்றுத்திறன் பெண்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விழிப் புணர்வு ஓட்டத்தில் பங்கேற்றனர்.

குழந்தைகள் முதல் 75 வயது மூதாட்டி வரை விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு ஓட்டத்தின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x