Published : 24 Mar 2014 08:39 AM
Last Updated : 24 Mar 2014 08:39 AM
சிவகங்கையை சிங்கப்பூராக்குவேன்னு சொன்னாரு, ஆனா, சிங்கப்பூர் ஆக்குறதுக்குப் பதிலா, பாழாக்கி குட்டிச்சுவராத்தான் ஆக்கியிருக்காரு ப.சிதம்பரம் என்று தேமுதிக தலைவர் விஜய காந்த் குற்றம்சாட்டினார்.
சிவகங்கை மக்கவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும் அக்கட்சியின் மாநில துணைத் தலைவருமான எச்.ராஜாவை ஆதரித்து சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
சிவகங்கை மாவட்டம் சுதந்திரம்அடைந்த காலத்தில் இருந்தே கருவேல மரமும் கட்டாந்தரையுமாகவே உள்ளது. இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எந்த அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பேருதான் பெத்த பேரு, ஆனால் குடிக்கத் தண்ணீர் இல்லை.
இங்க இருந்தே மத்தியில அமைச்சர் ஒருத்தர் இருக்காரு, அவர் பேரு என்ன, (கூட்டத் தினரைப் பார்த்து) ஆங்… சிதம்பரம். பைனான்ஸ் மினிஸ்டர். அவர் வங்கியும் ஏ.டி.எம். மட்டுமே திறந்திருக்காரு.
வெள்ளிக்கிழமை டில்லியில் இருந்து கிளம்புவாரு, சனிக் கிழமை ஏ.டி.எம்.ஐ திறப்பாரு, வீட்டில மதியம் சாப்பிட்டுட்டு திரும்பவும் டெல்லிக்கு போயி டுவாரு, இதுதான் அவர் செஞ்ச சாதனை.
அவர் சிவகங்கையை சிங்கப் பூராக்குவேன்னு சொன்னாரு, ஆனா சிங்கப்பூர் ஆக்குறதுக்கு பதிலா, குட்டிச்சுவராத்தான் ஆக்கியிருக்காரு. எங்க நின்னா தோத்துருவோம்கிற பயத்திலதான் அவர் நிக்காம, அவர் மகனை நிக்கவைச்சுருக்காரு.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மக்களை ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளன. பற்றாக்குறைக்கு காங்கிரஸ் கட்சியும் சேர்ந்துள்ளது. பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், திமுகவும், அதிமுகவும் இரட்டை பாம்புகள். இதோடு மூன்றாவதாக காங்கிரஸ் என்ற பாம்பும் சேர்ந்துள்ளது.
உங்களுக்கு பாம்பு வேணுமா, நாங்க வேணுமா. திமுக, அதிமுகவுக்கு மாறி மாறி ஓட்டுப்போடாம, மாற்றி தாமரைக்கு ஓட்டுப்போடுங்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT