Published : 11 Mar 2014 12:00 AM
Last Updated : 11 Mar 2014 12:00 AM
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டம் சென்னையில் திங்கள் கிழமை நடந்தது.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், வேலூர் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான அப்துல் ரஹ்மான் மீண்டும் போட்டியிடுவார் என அறிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் வேலூரிலேயே போட்டியிட்டார்.
மமக வேட்பாளர்
அதேபோல தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை தொகுதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்ட மும் திங்கள்கிழமை சென்னையில் நடந்தது. கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கட்சியின் மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, ‘‘மயிலாடுதுறையில் கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி போட்டியிடுவார்’’ என அறிவித்தார்.
சிதம்பரத்தில் திருமா
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக அவர்களது அலுவலகத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசும்போது, சிதம்பரம் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுவதாக கூறினார்.
திருவள்ளூர் தொகுதி வேட்பாளரை செவ்வாய்க்கிழமை அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT