Published : 28 Apr 2015 10:22 AM
Last Updated : 28 Apr 2015 10:22 AM

வெளிநாடுகளில் செவிலியர் பணிக்கு அரசு அழைப்பு

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சகம் கடந்த 8-ம் தேதி ஒரு ஆணை வெளியிட்டுள்ளது. அதில்,வெளிநாட்டு வேலை வாய்ப்பை அளிக்கும் நிறுவனங்களான தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், கேரள அரசின் நோர்கா ரூட்ஸ் (NORKA ROOTS) மற்றும் ஓவர்சீஸ் டெவலப் மென்ட் அண்ட் எம்ப்ளாயிமென்ட் பிரமோஷன் கன்சல்டன்ட்ஸ் (ODEPC) ஆகிய அரசு நிறுவனங்கள் மட்டுமே வரும் 30-ம் தேதி முதல் சவுதி அரேபியா, கத்தார், ஓமன் உட்பட 18 நாடுளில் செவிலியர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதற்கு ஆணையிட்டுள்ளது.

எனவே, வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாடும் செவிலியர் கள், அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் உடனடியாக பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதிவு கட்டண விவரங்களை >www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறியலாம். தொலைபேசி எண்கள்:

044-22502267, 22505886, 08220634389

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x