Published : 30 Apr 2015 07:54 AM
Last Updated : 30 Apr 2015 07:54 AM

தமிழக மீனவர்கள் 37 பேரின் காவல் 3-வது முறையாக நீட்டிப்பு

யாழ்பாணம் சிறையில் அடைக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்கள் 37 பேரின் காவலை மே 13 வரையிலும் நீட்டித்து பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நாகப்பட்டினம் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த ராஜமாணிக் கம், கந்தசாமி, திருவளர்ச்செல்வன், கனகராஜ் ,செந்தில்குமார் ஆகிய 5 பேருக்குச் சொந்தமான விசைப்படகில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 37 பேரை, கடந்த ஏப்ரல் 3-ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தற்போது யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிபதி மா.கணேசராஜா, 3-வது முறையாக மீனவர்களின் காவலை மே 13 வரையிலும் நீட்டித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x