Published : 30 Apr 2015 07:54 AM
Last Updated : 30 Apr 2015 07:54 AM
யாழ்பாணம் சிறையில் அடைக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்கள் 37 பேரின் காவலை மே 13 வரையிலும் நீட்டித்து பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
நாகப்பட்டினம் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த ராஜமாணிக் கம், கந்தசாமி, திருவளர்ச்செல்வன், கனகராஜ் ,செந்தில்குமார் ஆகிய 5 பேருக்குச் சொந்தமான விசைப்படகில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 37 பேரை, கடந்த ஏப்ரல் 3-ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தற்போது யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிபதி மா.கணேசராஜா, 3-வது முறையாக மீனவர்களின் காவலை மே 13 வரையிலும் நீட்டித்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT