Published : 02 Apr 2015 10:52 AM
Last Updated : 02 Apr 2015 10:52 AM
ஆயிரம்விளக்கில் உள்ள போலீஸ் குடியிருப்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆய்வு செய்தார்.
சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் போலீஸாருக்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு குடிதண்ணீர் உட்பட அடிப்படை வசதிகள் சரியாக செய்து கொடுக்கப்படவில்லை என்று அங்கு வசிக்கும் பெண்கள் சில நாட்களுக்கு முன்பு மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேற்று ஆயிரம்விளக்கு போலீஸ் குடியிருப்புக்கு சென்று ஆய்வு செய்தார்.
அங்கிருந்தவர்களிடம் உள்ள குறைகளை கேட்டு அவற்றை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஒவ்வொரு பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பை அந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் உதவி கமிஷனர் அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்து, குறைகளை நிவர்த்தி செய்யவும், மாநகராட்சி அதிகாரிகளின் உதவியுடன் சுகாதார பணிகளை உடனுக்குடன் செய்யவும் உத்தரவிட்டார்.
கூடுதல் கமிஷனர்கள் ஆபாஷ்குமார், திருஞானம், துணை கமிஷனர் அனில்குமார் கிரி ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT