Published : 29 Apr 2015 08:59 AM
Last Updated : 29 Apr 2015 08:59 AM
தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2015 முதல் 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக அரசும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க ஆணையிட்டுள்ளது.
ரொக்கமாக வழங்கல்
இந்த உயர்வு, 1-1-2015 முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்.
அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவிபெறும் மற்றும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்றங்களின் மற்ற ஓய்வூதியதாரர்கள், பொதுத் துறை, தன்னாட்சி நிறுவனம், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் திருத்தி அமைக்கப்பட்ட வீதத்தில் ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ள மாநில அரசுப் பணியாளர்கள் உள் ளிட்டோர் இதன்மூலம் பயன்பெறுவர்.
கருணைத் தொகை பெறுபவர் களுக்கு அகவிலைப்படி அளிப்பது குறித்து தனியாக ஆணை வெளியிடப்படும்.
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT