Published : 15 Apr 2015 10:00 AM
Last Updated : 15 Apr 2015 10:00 AM

சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 பேர் நிரந்திர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 2013-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்ற பி.என்.பிரகாஷ், புஷ்பா சத்தியநாராயணா, கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன், வி.எஸ்.ரவி, ஜி.சொக்கலிங்கம், வி.எம்.வேலுமணி ஆகிய 8 பேர் நிரந்தர நீதிபதிகளாகியுள்ளனர்.

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இவர்கள் 8 பேரும் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். இவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x