Published : 26 Apr 2015 09:09 AM
Last Updated : 26 Apr 2015 09:09 AM
கோடை விடுமுறையை முன்னிட்டு மெரினா கடற்கரை, கோவளம், மகாபலிபுரம், வண்டலூர் உள் ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மற்றும் கோயில்களுக்கு 150 சிறப்பு பேருந்துகள் விடப்படுகின்றன.இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
26-ம் தேதி (இன்று) முதல் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இச்சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் மற்றும் சிறுவாபுரி முருகன் கோயில் ஆகிய வழிபாட்டு தலங்களுக்கும், பெசன்ட் நகர், அண்ணா சதுக்கம், திருவல்லிக்கேணி, கோவளம், வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அண்ணா சதுக்கம் வழியாக 70 பேருந்துகளும், கோவளம் வழியாக 15 பேருந்துகளும், வண்டலூர் உயிரியல் பூங்கா வுக்கு 20 பேருந்துகளும், மாமல்லபுரத்துக்கு 10 பேருந்துகளும், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு 10 பேருந்துகளும், திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு 17 பேருந்துகளும் மற்றும் சிறுவாபுரி முருகன் திருக்கோயிலுக்கு 8 பேருந்துகள் என மொத்தம் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்கா செவ்வாய்க்கிழமைகளில் செயல்படும்
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது விடுமுறை காலம் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணிகளுக்காக பூங்கா செயல்படாது. இருப்பினும் ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை செயல்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT