Published : 13 Apr 2015 08:12 AM
Last Updated : 13 Apr 2015 08:12 AM

விமான நிலையத்தில் 1.3 கிலோ தங்கம் பறிமுதல்: சென்னையில் ஆந்திர இளைஞர் கைது

சென்னை விமான நிலையத்தில் 1.3 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குவைத்தில் இருந்து விமானம், சென்னை விமான நிலையத்துக்கு நேற்று காலை 7.30 மணிக்கு வந் தது. விமானத்தில் வந்த பயணி களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவை சேர்ந்த சுதர்சன் (31) என்பவரை சோதனை செய்தபோது, அவரது பேண்ட் பாக்கெட்டில் 1.3 கிலோ எடையுள்ள 13 தங்க பிஸ்கட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரிடம் இருந்து தங்கக்கட்டி களை பறிமுதல் செய்த அதிகாரி கள், அவரை கைது செய்தனர். அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x