அருந்ததி ராய்க்கு ’அம்பேத்கர் சுடர் விருது’

அருந்ததி ராய்க்கு ’அம்பேத்கர் சுடர் விருது’
Updated on
1 min read

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு ‘அம்பேத்கர் சுடர் விருது’ வழங்கப்படுகிறது என்று அக்கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

2015-ம் ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர் விருது’ உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும், ஆதிவாசி மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும், அருந்ததி ராய்க்கு வழங்கப்படுகிறது. மே மாதத்தில் சென்னையில் நடைபெறவுள்ள விழா வில் அருந்ததி ராய் கலந்துகொண்டு, இந்த விருதை பெறுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in