Published : 11 Apr 2015 09:04 AM
Last Updated : 11 Apr 2015 09:04 AM

தமிழகத்தில் இருந்து வெளியேறிய ஆந்திரா அரசுப் பேருந்துகள்

ஆந்திரா அரசு பேருந்துகள் பாதுகாப்பு கருதி நேற்று ஆந்திரத்துக்கு கொண்டு செல் லப்பட்டதால், 4-வது நாளாக தமிழகம்-ஆந்திரா இடையே பேருந்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆந் திரா அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகம் - ஆந்திரா எல்லை யோரம் மற்றும் சென்னை யின் சில இடங்களில் போராட் டங்களில் பேருந்து கண்ணாடி கள் உடைக்கப்படுகின்றன. எனவே, தமிழகம் செல்லும் ஆந்திரா பேருந்துகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. தற்போது, தொடர் போராட்டங்கள் நடந்து வருவதால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழகத்தில் இருக்கும் ஆந்திரா அரசுக்கு சொந்தமான 2s10 பேருந்து கள் ஆந்திராவுக்கு நேற்று காலையில் கொண்டு செல்லப் பட்டன என்றார்.

தமிழக அதிகாரி களிடம் கேட்ட போது, ‘‘ஆந் திரா மாநிலம் திருப்பதி, நெல் லூர், காளஹஸ்தி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் வழக்கம்போல செல்கின்றன.

திடீரென பிரச்சினை ஏற்பட்டால், பயணிகளின் பாதுகாப்பு கருதி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x