Published : 23 Apr 2015 10:09 AM
Last Updated : 23 Apr 2015 10:09 AM

திருவள்ளூர் மாவட்டம்: வேலைவாய்ப்பற்றோர் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தில் 2010, ஜன. 1 முதல் 2010, மார்ச் 31 வரையான காலாண் டில் பதிவு செய்து, தற்போது 5 ஆண்டுகள் முடிந்துள்ள பட்டப் படிப்பு, மேல்நிலைக் கல்வி, பட்டயப் படிப்பு, எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், நிகழ் காலாண்டுக்கு வேலைவாய்ப் பற்றோர் உதவித் தொகை கோரி விண்ணப்பிப்பதற்கான உரிய விண்ணப்பப் படிவங் கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தில் தற்போது விநியோகிக்கப்படு கின்றன.

உதவித் தொகை பெற விரும்பு வோர், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச் சான்றுகள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை ஆகியவற்று டன் வேலை நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்று, விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x