

தமிழக சட்டப் பேரவை தேர்தல் எந்த நேரத்திலும் நடைபெறலாம் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கலந்துகொண்டு தம்பிதுரை பேசினார். ''மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்த வில்லை.
அதிமுக நிர்வாகிகள் கழக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது முக்கியமல்ல. வரும் சட்டப்பேரவை தேர்தலில் சிறப்பாக பணியாற்ற கூடியவர்களாக இருக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் எந்த நேரத்திலும் நடைபெறலாம். அதனால், கட்சித் தேர்தலில் வெற்றி பெறும்போதே, தேர்தலுக்கான பணிகளையும் தொடங்க வேண்டும்'' என்று தம்பிதுரை பேசினார்.