அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பார்ம் பட்டதாரிகளுக்கு விரிவுரையாளர் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவக் கல்லூரிகளில்  எம்.பார்ம் பட்டதாரிகளுக்கு விரிவுரையாளர் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மருத்துவத் துறை மற்றும் மருத்துவ கல்வித் துறையில் பணிபுரிந்துவருவோரில் எம்.பார்ம் முடித்தவர்களுக்குத்தான், அரசு மருத்துவ கல்லூரிகளில் மருந்தாளுநர் விரிவுரையாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

மதுரையை சேர்ந்த எம்.முத்துராமலிங்கம், ஆர். ஜெயசு ரேஷ், ஆர். அன்பழகன், ஜி.சத்யபாலன், எஸ்.ஜஸ்டின் சுரேஷ், ஜி. மகுடேசுவரி, கே.நஞ்சப்பன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மருத்துவத் துறை, மருத்துவ கல்வித் துறையில் மருந்தாளுநராக பணியாற்றி வருபவர்களில் பி.பார்ம் முடித்தவர்கள் பதவி உயர்வு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருந்தாளுநர் விரிவுரையாளர்களாக நியமிக்க ப்படுகின்றனர்.

மருந்தாளுநர் விரிவுரையாளர்களாக பி.பார்ம் முடித்தவர்களை நியமனம் செய்வது சரியல்ல. அகில இந்திய மருத்துவக் கல்வி கவுன்சில் விதிப்படி எம்.பார்ம் படித்தவர்களைத்தான் மருந்தாளுநர் விரிவுரையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

எனவே, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் விரிவுரையாளர் பணியிடங்களில் மருத்துவத் துறை மற்றும் மருத்துவ கல்வித் துறையில் பணியில் உள்ள எம்.பார்ம் முடித்தவர்களை நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிட்டார். விசாரணைக்குப்பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், விதிப்படி எம்.பார்ம் முடித்தவர் களைத்தான் மருந் தாளுநர் விரிவுரையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும். தமிழகத்தில் 28 மருந்தாளுநர் விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலிப் பணியிடங்களுக்கு எம்.பார்ம் முடி த்து மருத்துவத் துறை, மருத்துவக் கல்வித் துறையில் பணிபுரிந்து வருபவர்களை நியமிக்க, மாநில பணிமூப்பு பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநர் தயார் செய்து, ஒரு மாதத்தில் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலருக்கு அனுப்ப வேண்டும். அந்தப் பட்டியலுக்கு செயலர் ஒரு மாதத்தில் ஒப்புதல் வழங்கி, விரிவுரையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

28 மருந்தாளுநர் விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in