Published : 07 Apr 2015 09:42 PM
Last Updated : 07 Apr 2015 09:42 PM
சிவில் நீதிபதி பணிக்கான நேர்முகத் தேர்வு ஏப்ரல் 15 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
2013-2014-ம் ஆண்டுக்கான சிவில் நீதிபதி பணியில் அடங்கிய 162 காலியிடங்களை நிரப்புவதற்காக 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1, 2-ம் தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதிலிருந்து 590 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 4 முதல் 11-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 314 பேர் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 15 முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இதற்கான அழைப்பாணை விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் அழைப்புக் கடிதத்தை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT