Published : 24 Apr 2015 11:33 AM
Last Updated : 24 Apr 2015 11:33 AM

சென்னை விமான நிலையத்தில் 42-வது முறையாக கண்ணாடி விழுந்து விபத்து

சென்னை விமான நிலையத்தின் 7-வது நுழைவுவாயிலின் மேற்கூரையில் கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இது சென்னை விமான நிலையத்தில் காண்ணாடி விழுந்து 42-வது முறையாக நடக்கும் விபத்தாகும்.

சென்னை விமான நிலையத்தில் மேற்கூரைகள், கண்ணாடிகள், கண்ணாடி கதவுகள் மற்றும் கிரானைட் கற்கள் உடைந்து விழுவது அடிக்கடி நடக்கிறது. இதனால் சென்னை விமான நிலையத்துக்குள் வரும் பயணிகள் மற்றும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை விமான நிலையத்தில் கண்ணாடி ஒன்று திடீரென்று உடைந்து கீழே விழுந்து நொறுங்கியது. 42-வது முறையாக நடத்த விபத்து சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x