Last Updated : 25 May, 2014 10:17 AM

 

Published : 25 May 2014 10:17 AM
Last Updated : 25 May 2014 10:17 AM

காலாவதியான சிலிண்டர்களை பயன்படுத்துவதால் தொடரும் விபத்துகள்: எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்குமா?

வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர்கள் காலாவதியான பிறகும் நுகர்வோருக்கு விநியோ கிக்கப்படுவதால் விபத்துகள் தொடர்கின்றன. எண்ணெய் நிறு வனங்கள் இதைத் தடுத்து நிறுத்தா விட்டால் பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று நுகர்வோர் அமைப்புகள் எச்சரிக்கின்றன.

முன்பெல்லாம் வீடுகளில் சமையல் செய்வதற்கு மண்ணெண் ணெய் ஸ்டவ்வும், விறகு அடுப்பு களும் பயன்படுத்தப்பட்டு வந் தன. ஆனால், தற்போது எரி வாயு சிலிண்டர்கள் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங் கள் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன.

சிலிண்டரின் ஆயுட்காலம்

ஒரு சிலிண்டர் உற்பத்தி செய்யப் பட்டு பத்து ஆண்டுகள்தான் பயன் படுத்தப்பட வேண்டும் என்று விதி உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதை பரிசோதனை செய்து, உபயோகத்திற்கு ஏற்ற தாக இல்லை என்றால் அந்த சிலிண்டரை அழித்து விட வேண்டும். சிலிண்டரில் காஸ் நிரப்பும் ஆலைகளில் ‘ரீபில்’ செய்யும் முன் இது உறுதி செய் யப்படும். எரிவாயு சிலிண்டர் களின் மேல்பகுதியில், பேச் நம்பர், பரிசோதனை செய்த நாள் போன்ற விவரங்கள் குறிப்பிடப் பட்டிருக்கும். எந்த நாளில் இருந்து அந்த சிலிண்டர் பயன் படுத்த தகுதியற்றது எனவும் குறிப் பிடப்பட்டிருக்கும். ஓராண்டை நான் காக பிரித்து, ஏ, பி, சி, டி என குறிக்கப்பட்டிருக்கும்.உதாரண மாக, ஒரு சிலிண்டரில் ஏ-20 என குறிப்பிட்டிருந்தால், 2020ம் ஆண்டு முதல் காலாண்டுடன் அந்த சிலிண்டர் பயன்பாட்டிற்கு தகுதி யற்றதாகி விடும்.

அதிகரிக்கும் விபத்துகள்

அண்மைக்காலமாக, எரி வாயு சிலிண்டர்கள் வெடித்து விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. உதாரணமாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மறைமலை நகர் அருகே வீட்டில் சிலிண் டர் வெடித்து மூன்று குழந்தை கள் உள்பட ஐந்து பேர் பலியா னார்கள். இதேபோல், வெள்ளிக் கிழமை சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் ஒரு டீக்கடையில் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. காலாவ தியான சிலிண்டர்கள் பயன் படுத்தப்பட்டதாலேயே விபத்து ஏற் பட்டதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இதற்கிடையே, திருவள் ளூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத் தின் ஏஜென்சியில் இருந்து காலாவதியான சிலிண்டர் ஒன்று வாடிக்கையாளருக்கு விநியோ கம் செய்யப்பட்டது. அந்த சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. சிலிண்டரில் சி-12 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2012ம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் இந்த சிலிண்டர் உபயோகத்திற்கான தகுதியை இழந்துள்ளது. அதன் பிறகு, அந்த சிலிண்டரை சோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், சோதனை செய்யாமல், மீண்டும் ரீபில் செய்து வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த எரி வாயு சிலிண்டரை பெற்ற வாடிக்கை யாளர் ராகவேந்திர பட் கூறுகை யில், “சிலிண்டர் குறித்து எனக்கு சில அடிப்படை பாது காப்பு விஷயங்கள் தெரியும் என்ப தால், நான் உடனே அதை மாற்றி விட்டேன். ஆனால், பொது மக்களில் எத்தனை பேருக்கு இத் தகைய விஷயங்கள் தெரியும்?’’ என கேள்வி எழுப்பினார்.

நுகர்வோர் அமைப்பு

தமிழ்நாடு முற்போக்கு நுகர் வோர் மையத்தின் ஒருங்கிணைப் பாளர் சடகோபன், இதுகுறித்து ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘சிலிண் டர்களின் மேல் பொருத்தப்படும் ரப்பர் வாஷர்களை முன்பு எண் ணெய் நிறுவனங்களே உற்பத்தி செய்தன. தற்போது, அவை ‘அவுட்சோர்சிங்’ முறையில் உற் பத்தி செய்யப்படுகின்றன. அவை போதிய தரத்து டன் இல்லை. எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி இதுபோன்ற காலாவதியான சிலிண்டர்களை கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். அத்துடன், எண்ணெய் நிறுவனங்கள் நுகர்வோர் அமைப்புடன் இணைந்து, எரி வாயு சிலிண்டர்களை எப்படி பாது காப்புடன் கையாள்வது என்பது குறித்து, பெண்களுக்கு பயிற்சி அளித்து விழிப்புணர்வை ஏற் படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x