Published : 17 Apr 2015 09:05 AM
Last Updated : 17 Apr 2015 09:05 AM
சென்னையின் பேருந்து தட சாலை களை சுத்தம் செய்ய இயந்திர துடைப்பங்களையும், பள்ளங்களை சீர் செய்யும் இயந்திரங்களையும் பயன்படுத்த மாநகராட்சி திட்டமிட் டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
சென்னையின் அனைத்து சாலை களையும் தற்போது துப்புரவு பணி யாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.
ஒரு சில முக்கியமான பேருந்து தட சாலைகளின் ஓரங்களை சுத்தம் செய்ய மட்டும் குப்பைகளை அகற்றும் இயந்திரம் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், இந்த இயந் திரத்தை சாலையின் ஓரங்களை சுத்தம் செய்ய மட்டுமே பயன்படுத்த முடியும். நடைபாதைகள் சற்று வளைவாக இருந்தாலும் அந்த இயந்திரத்தை அங்கு பயன்படுத்த முடியாது. மேலும், சுத்தம் செய்யும் போது சாலையில் தூசி பறக்கும்.
தற்போது சோதித்து பார்க்கப் பட்ட இயந்திரத்தைப் பற்றி மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “பழைய இயந்திரத்தில் இருந்த இடர் பாடுகள் எதுவும் இதில் இல்லை. இந்த இயந்திரத்தை ஒரு தடவை பயன்படுத்தினாலே சாலை முழு வதும் சுத்தமாகி விடுகிறது.
பெரிய கற்களைக் கூட இதை வைத்து அகற்ற முடிகிறது. துப்புரவு பணியாளர்களை கண்காணிப்பதும், பணிகள் முடிந்தனவா என்று பார்ப்பதும் சிரமமாக உள்ளது” என்றார்.
சென்னையில் சில மணி நேரங்கள் மழை பெய்தால் கூட சாலைகளில் பள்ளங்கள் ஏற்படுகின்றன. இந்த பள்ளங் களினால், வாகன ஓட்டிகளுக்கு கழுத்து வலியும், முதுகு வலியும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சோதனை ஓட்டத்துக்கு வந்த இயந்திரம் தானாகவே பள்ளங்களை சுத்தம் செய்து, தார் கலவை தயாரித்து, பள்ளங்களை மூடிவிடும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT