Published : 15 Apr 2015 02:47 PM
Last Updated : 15 Apr 2015 02:47 PM
ட்விட்டர் சமூக வலைதளத்தில் 'ஒரு சொல் கவிதை' என்ற பதம், இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
>#ஒருசொல்கவிதை என்ற ஹேஷ்டேக் புதன்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம் வகித்தது.
தமிழில் குறும்பதிவுகளை இடுவோர், ட்விட்டரில் இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி இலக்கியம், சினிமா, அரசியல் என பல்வேறு தளங்களையும் உட்படுத்தில் ஒரு சொல்லில் கவிதைச் சொல்லி வருகிறார்கள்.
>#ஒருசொல்கவிதை என்ற ஹேஷ்டேக்கில் தமிழ், காதல், அன்பு, சோறு, அம்மா, தம்பி, திமிர், பொறுப்பு, கடன், நீ என ஒற்றைச் சொல்லில் உலகை அடக்கும் அம்சங்களை பதிந்து வருகிறார்கள்.
முன்னதாக, தமிழ்ப் பதங்கள் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வலம் வரத் தொடங்கிய பிறகு, #தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக், இந்திய அளவில் முதலிடம் வகித்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT