Published : 30 Apr 2015 07:42 AM
Last Updated : 30 Apr 2015 07:42 AM

பாலியல் புகாரில் காஸ் நிறுவன ஊழியர் கைது

காஸ் சிலிண்டர் போட வந்தபோது வீட்டில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காஸ் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை தி.நகரில் வசிப்பவர் மகேந்திரன். நேற்று பிற்பகலில் இவரது கர்ப்பிணி மனைவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சமையல் காஸ் சிலிண்டர் போடுவதற்காக ஊழியர் ஒருவர் வந்தார். சிலிண்டரை இறக்கி வைத்து விட்டு, பில் கொடுத்து பணத்தை பெற்றபோது அந்த பெண்ணிடம் அந்த ஊழியர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

உடனே அந்த பெண் அபயக் குரல் எழுப்பினார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அந்த நபரை பிடித்து தரும அடி கொடுத்து மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர்.

விசாரணையில் அவரது பெயர் அருண்குமார்(37) என்று தெரியவந்தது. அவர் திருமணமாகி குழந்தைகளுடன் கூடுவாஞ்சேரியில் வசிப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x