Published : 27 Apr 2015 08:44 AM
Last Updated : 27 Apr 2015 08:44 AM

விஜயகாந்த் சந்தித்த கட்சிகள் ஓரணிக்குள் வருவது சாத்தியமில்லை: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

கருணாநிதி, இளங்கோவன், வாசன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்தது தேர்தல் கூட்டணிக்கான முன்னோட் டமா? என்ற கேள்விக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தி இந்து’விடம் அளித்த பதில்:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக நீடிக்கிறது. கருணாநிதி, வாசன், இளங்கோவன், திருமா வளவன், வைகோ ஆகியோரை விஜயகாந்த் சந்தித்ததில் அரசியல் நோக்கம் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் என் கிற முறையில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சந்திக்க அனுமதி கேட்டுத்தான் பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். பிரதமரின் சந்திப் புக்கு பாஜக ஏற்பாடு செய்ததாக விஜயகாந்த் வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த சந்திப்புகளை வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும் விஜயகாந்த் சந்தித்த கட்சிகள் எல்லாம் ஓரணிக்குள் வருவது சாத்தியம் இல்லை என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தமிழகத்தின் நியாயங்களை ஒரே குரலில் பிரதமரிடம் எடுத்துக் கூற விஜயகாந்த் முயற்சி எடுத்து வருகிறார். இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகளிடையே ஓர் இணக்கமான சூழல் உருவாக இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x