Published : 03 Apr 2015 09:53 AM
Last Updated : 03 Apr 2015 09:53 AM

ரூ.11 லட்சம் கையாடல்: மதுராந்தகம் கால்நடைத்துறை உதவி இயக்குநர் சஸ்பெண்ட்

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தின் கால் நடைத்துறை உதவி இயக்குநராக பாஸ்கரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவள் ளூரில் கால்நடை துறை உதவி இயக்குநராக பணியாற்றினார். அப்போது, கால்நடைத்துறைக்கு சொந்தமான ரூ.11 லட்சம் அரசு பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக, கால்நடைத்துறை தணிக்கையின்போது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, மதுராந்தகம் கால்நடைத்துறை உதவி இயக்குநர் பாஸ்கரனை, கால்நடைத்துறை இயக்குநரகம் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

பணியிடை நீக்கம் செய்யப் பட்டதற்கான ஆணையை, காஞ்சிபுரம் மாவட்ட கால்நடைத் துறை அதிகாரிகள் மதுராந்தகம் அலுவலகத்தில் பாஸ்கரனிடம் நேற்று வழங்கினர்.

உதவி இயக்குநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தொடர் பாக, காஞ்சிபுரம் மாவட்ட கால் நடைத்துறை துணை இயக்கு நர் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டபோது, பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான எந்த விவரங்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x