Published : 24 Apr 2015 10:53 AM
Last Updated : 24 Apr 2015 10:53 AM
செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ஆய்வு செய்வதற்காக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று நேரில் வந்தார். இதில், கணினிமயம், வங்கியின் பாதுகாப்பு, பயிர் மற்றும் நகைக்கடன் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வில்லியம்பாக்கம் ஊராட்சி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்று மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். செங்கல்பட்டு பகுதியில் உள்ள நகர கூட்டுறவு வங்கி கிளையிலும் ஆய்வு மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT