Published : 27 Apr 2015 09:28 AM
Last Updated : 27 Apr 2015 09:28 AM

30-ல் போராட்டம் போக்குவரத்துத் துறை பணியாளர் அறிவிப்பு

சாலை பாதுகாப்பு மசோதா 2014-ஐ திரும்ப பெறக் கோரி வரும் 30-ம் தேதி தமிழ்நாடு போக்குவரத்துத்துறை பணியாளர் அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சாலைபாதுகாப்பு மசோதா - 2014 சட்டமாக்கப்பட்டால் போக்குவரத்து துறை தனியார் வசம் போய்விடும். மேலும், ஓட்டுநர் உரிமங்கள், வாகனப் பதிவுகள், அனுமதிச் சீட்டுகள் உள்ளிட்டவைகளும் தனியாரிட மிருந்து பொதுமக்கள் பெற வேண்டிய நிலை ஏற்படும். இதற்காக பெரும் தொகையை மக்கள் செலவிட வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, மக்களின் நலனுக்கு எதிராகவுள்ள இந்த மசோதாவை கண்டித்தும் அதை திரும்ப பெறக்கோரியும் வரும் 30-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 11 இணை மற்றும் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகங்கள் முன்பு பேராட்டம் நடத்தவுள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x