சென்னை பல்கலை.யில் எம்.பி.ஏ. மாணவர்கள் 55 பேருக்கு பணி நியமன ஆணைகள்

சென்னை பல்கலை.யில் எம்.பி.ஏ. மாணவர்கள் 55 பேருக்கு பணி நியமன ஆணைகள்
Updated on
1 min read

சென்னை பல்கலைகழகக் எம்.பி.ஏ மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் நேற்று வழங்கப்பட்டன. பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் ஆர்.தாண்டவன் ஆணைகளை வழங்கினார்.

சென்னைப் பல்கலைகழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்கள் எம்.பி.ஏ. படித்து முடிக்கின்றனர். இந்த ஆண்டு இவர்களுள் இதுவரை 55 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஆர். தாண்டவன் பேசும்போது, “கடந்த 3 ஆண்டுகளாக இந்த துறையில் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் மூலமாக வேலை கிடைத்துள்ளது. இந்த ஆண்டும் 100 சதவீதம் வேலை கிடைத்துவிடும். தற்போது வேலை கிடைக்கப் பெற்றுள்ள மாணவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.4.8 லட்சமாகும்” என்றார்.

மேனேஜ்மெண்ட் படிப்புத் துறையின் தலைவர் ஆர்.தேன்மொழி கூறும்போது, “தற்போது படிக்கும் மாணவர்களிடம் மனிதவள மேலாளராக வேண்டும் என்பதுதான் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் டி.சி.எஸ். போன்ற ஐடி கம்பெனிகளில் மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. மேலும், தனியார் வங்கிகளிலும் மாணவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

இந்நிகழ்ச்சியில் 33 ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெறும் பேராசிரியர் பி.டி.னிவாசன் கவுரவிக்கப்பட்டார். பல்கலைக்கழக மாணவர்களின் மேம்பாட்டுக்காக அவரது பெயரில் ரூ.2 லட்சம் நிதியம் நிறுவப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in