Published : 15 Apr 2015 10:02 AM
Last Updated : 15 Apr 2015 10:02 AM

குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் சென்னை புத்தகச் சங்கமம்

உலகப் புத்தக தின விழாவை முன்னிட்டு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் ‘சென்னை புத்தகச் சங்கமம்’ என்ற பெயரிலான புத்தகக் காட்சி நேற்று முன்தினம் தொடங்கி 23-ம் தேதி வரை நடக்கிறது. தினமும் பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும். நேற்று விடுமுறை நாள் என்பதால் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது. 18,19 ஆகிய நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட் டுள்ளன. இங்கு வாங்கும் நூல்களுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங் கப்படுகிறது.

குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் சிறுவர்களுக்கான புத்தகங் கள் மற்றும் வண்ணந்தீட்டும் அட்டைகள், எளிய அறிவியல் பரிசோதனைப் பொருட்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட விதவிதமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும், நேஷனல் புக் டிரஸ்ட்டும் இணைந்து மூன்றாவது ஆண்டாக நடத்தும் சென்னை புத்தகச் சங்கமத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தலைப்பிலான புத்தகங்கள் உள்ளன. சமூகம், கலை - இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், விளையாட்டு, சமையல், பொது அறிவுப் புத்தகங்கள் என பல்வேறு வகையிலான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

புத்தகக் காட்சி நுழைவுக் கட்டணம் ரூ.10. பள்ளி அடையாள அட்டையோடு வரும் மாணவர்களுக்கும், 12 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தை களுக்கும் அனுமதி இலவசம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x