Published : 25 Apr 2015 08:31 AM
Last Updated : 25 Apr 2015 08:31 AM

பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புக்கு ஏப்.28 முதல் விண்ணப்பம்

தொழில்நுட்பக் கல்வி ஆணையர் பிரவீண் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2015-16ம் கல்வி ஆண்டுக்கு பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு விண்ணப்பிக்க பட்டயப் படிப்பு முடித்து 2 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். அத்துடன் பணியாற்றி வருபவராக இருக்க வேண்டியதும் அவசியம். மேலும், 2 ஆண்டு பணி அனுபவமும் வேண்டும். விண்ணப்பிக்கும் கல்லூரியில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும். www.ptbe-tnea.com என்ற இணையதளத்தின் மூலமாக ஏப்ரல் 28 முதல் மே 8-ம் தேதி வரை ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கோவையில் உள்ள கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு மே 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x