Published : 21 Apr 2015 08:37 AM
Last Updated : 21 Apr 2015 08:37 AM

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

ஆந்திரத்தில் தமிழக தொழி லாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மறைந்த பாடகர் நாகூர் ஹனிபாவின் உருவப்பட திறப்பு விழா நாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள செல்லும் வழியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆந்திரத்தில் தமிழக தொழிலா ளர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு அமைதி காத்து வருகிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு பிரதமருக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது. கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அணை கட்டுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கிறது. அதேபோல் தமிழக அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அணை கட்டக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x