Published : 20 Apr 2015 10:09 AM
Last Updated : 20 Apr 2015 10:09 AM

குழந்தை பலியான சம்பவம்: நில உரிமையாளர் கைது

ஆற்காடு அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து குழந்தை பலியான சம்பத்தில், நிலத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: ஆற்காடு தாலுகா, சாம்பசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டி (34). அபுதாபியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா (26), கடந்த 12-ம் தேதி ஆற்காடு அடுத்த கூராம் பாடி கிராமத்தில் உள்ள தனது தந்தை கனகசபையின் வீட்டுக்கு குழந்தைகள் தமிழரசன் (2), நிஷா ஆகியோருடன் சென்றார். அங்கு, கனகசபை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை தமிழரசன், மூடப்படாத நிலையில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அரக்கோணம் பேரிடர் மேலாண்மை குழுவினர் குழந்தையை மீட்டனர். பின்னர் வாலாஜா அரசு மருத்துவ மனையில் பரிசோதித்த போது, குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து நிலத்தின் உரிமையாளரும், கீதாவின் தாய் மாமாவுமான ராஜேந்திரன் என்பவரை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x