Published : 06 Apr 2015 10:31 AM
Last Updated : 06 Apr 2015 10:31 AM
ஆந்திராவுக்கு கடத்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 9 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட சோம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் ஆந்திராவுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பொன்னேரி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள், சோம்பட்டு கிராமத்தில் கஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது, வீட்டு வளாகத்தில் யாரும் இல்லாத நிலையில், 9 டன் அளவு கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள், ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வருவாய்த் துறை அதிகாரிகள், ரேஷன் அரிசியை பஞ்செட்டியில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT