Published : 23 Apr 2015 09:52 AM
Last Updated : 23 Apr 2015 09:52 AM

கிருஷ்ணா நீர் திறப்பு குறையவில்லை: தமிழக எல்லையில் வரத்து குறைந்துள்ளது

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு குறையாத போதும், தமிழக எல்லையை வந்தடையும் நீரின் அளவு குறைந்துள்ளது. ஆந்திரத்தில் விவசாயத்துக்காக தண்ணீர் எடுக்கப்படுவதே நீர் வரத்து குறைந்ததற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப் படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் கடந்த 10-ம் தேதி சென்னைக்கு திறந்து விடப்பட்டது. கண்டலேறு அணையிலிருந்து 10-ம் தேதி வினாடிக்கு 117 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு 20-ம் தேதி 1,694 கன அடி நீரும், 22-ம் தேதி 1,699 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை கடந்து பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. இதனால் பூண்டி ஏரியில் நீர் மட்டம் உயர்ந்தது.

கடந்த 2 நாட்களாக ஆந்திராவி லிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு குறையவில்லை என்றா லும், தமிழக எல்லையை வந் தடையும் நீரின் அளவு குறைந் துள்ளது. ஆந்திராவில் 10-ம் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் 14-ம் தேதி வினாடிக்கு 394.67 கன அடி என்ற அளவில் ஊத்துக் கோட்டையை வந்தடைந்தது.

இந்த அளவு படிப்படியாக உயர்ந்து 20-ம் தேதி 706.88 கன அடியை எட்டியது. ஆனால், 21-ம் தேதி இது 696.56 கன அடியாகவும், 22-ம் தேதி 676.08 கன அடியாகவும் குறைந்தது.

கண்டலேறு அணைக்கும் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டைக்கும் இடையே 30 மடைகள் உள்ளன. இவற்றிலிருந்து ஆந்திர விவசாயிகள் பாசனத்துக்காக தண்ணீர் எடுத்துக்கொள்வதால் தமிழகத்துக்கு போதிய நீர் வருவதில்லை என்ற புகார் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இந்த முறை தமிழக அதி காரிகள் நேரில் சென்ற பார்வையிட்ட பிறகு, வழியில் நீர் எடுப்பது தடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் சில மடைகள் ஆந்திர விவசாயிகளின் பாசனத்துக்காக திறந்து விடப்படுவதால், தமிழக எல்லையை வந்தடையும் நீரின் அளவு குறைவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x