Published : 13 Apr 2015 08:40 PM
Last Updated : 13 Apr 2015 08:40 PM
நாளை (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சிஐடியூ உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்ததுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
போக்குவரத்து ஊழியர்களின் 12-வது ஊதிய உயர்வு தொடர்பான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் இன்று நடந்தது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 5.5% ஊதிய உயர்வு வழங்க இருப்பதாக விருப்பம் தெரிவித்தது. இதை சிஐடியூ உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துள்ளன.
இதனை அடுத்து, தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் மாலையில் கூடி ஆலோசனை நடத்தியது. அதில், ஊதிய உயர்வை கண்டித்து, நாளை ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT