Published : 18 Apr 2015 09:33 AM
Last Updated : 18 Apr 2015 09:33 AM

தமிழர் பண்பாட்டை அவமதிப்பதா? - ஈஸ்வரன் கேள்வி

தமிழர் பண்பாட்டை அவமதிப்பதைக் கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் பேசியதாவது:

தமிழரின் பண்பாட்டை தாக்குவதற்கு தாலி அகற்றும் போராட்டம் நடத்தப்படுகிறது. இது பண்பாட்டுக்கு எதிரான நிகழ்ச்சியாகும். தமிழக அரசு தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதேசமயம் தாலி அகற்றும் போராட்டத்துக்கும் அனுமதி வழங்குகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு எதிர் காலத்தில் அரசு அனுமதி வழங்கக் கூடாது. தமிழகத்தின் பண்பாடு மற்றும் பாரம்பரிய அம்சங்களை பாதுகாக்க மத்திய,மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x