Published : 08 Mar 2015 10:16 AM
Last Updated : 08 Mar 2015 10:16 AM
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், உயர் ரத்த அழுத்தம் காரணமாக நேற்று நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் நரம்பு பாதித்து இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்ற போது, அவர்களை நாஞ்சில் சம்பத்துக்கு அடையாளம் காண முடியவில்லை. அதிமுக தலைமை அறிவுறுத்தலின்படி, விமானம் மூலம் சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு நாஞ்சில் சம்பத் கொண்டு செல்லப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT