Published : 04 Mar 2015 10:20 AM
Last Updated : 04 Mar 2015 10:20 AM

7-ம் தேதி இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்: சென்னையில் நல்லகண்ணு பங்கேற்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் 7-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மார்ச் 7-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அக்கட்சியின் தென்சென்னை மாவட்டச் செய லாளர் எஸ்.ஏழுமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 7-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினர் கலந்து கொள்கின்றனர். மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் தா.பாண்டியன், ஆர்.நல்லகண்ணு, கே.சுப்பராயன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x