Published : 30 Mar 2015 10:51 AM
Last Updated : 30 Mar 2015 10:51 AM

ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை அறுத்து வீசிய இலங்கை கடற்படையினர்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படையினர் அறுத்து கடலில் வீசினர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையும், கைது நடவடிக்கைகளையும் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த ஐந்து நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

இப்போராட்டத்தை வெள்ளிக்கிழமை கைவிட்ட னர். 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண் டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நெடுந்தீவு, கச்சத்தீவு ஆகிய பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படை யினர் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை தடுத்து நிறுத்தி, `இலங்கை கடற்பகுதிக்குள் வந்து மீன்பிடிக்கக்கூடாது என பலமுறை எச்சரித்தும் மீண்டும் மீண்டும் ஏன் வருகிறீர்கள்?’ எனக் கேட்டு மீனவர்களின் படகுகளில் ஏறினர். பின்னர் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி கடலுக்குள் வீசினர். இதனால் பயந்துபோன மீனவர்கள் உடனே கரை திரும்பினர்.

ராமேசுவரம் திரும்பிய மீனவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கச்சத்தீவு பகுதிகளில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x