Published : 03 Mar 2015 08:15 AM
Last Updated : 03 Mar 2015 08:15 AM

சென்னை குரோம்பேட்டை பணிமனையில் போக்குவரத்து ஊழியர் மோதல், கல்வீச்சால் பதற்றம்: ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை மார்ச் 12-க்கு ஒத்திவைப்பு

போக்குவரத்து ஊழியர்களின் 12-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் நேற்று நடத்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தொழிற்சங்கத்தினரி டையே ஏற்பட்ட திடீர் மோதலில் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

போக்குவரத்து ஊழியர்களுக் கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில் நேற்று நடந்தது. அரசு அமைத்த 14 பேர் கொண்ட குழுவினருடன் அண்ணா தொழிற்சங்கம், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 42 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்துத் துறை செயலாளர் பிரபாகர ராவ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. ஒவ்வொரு தொழிற்சங்கம் சார்பிலும் தலா 2 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12.30-க்கு தொடங்கி 2.30 மணி வரையும், உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 3.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரையும் பேச்சுவார்த்தை நடந்தது.

தொழிற்சங்கத்தினரின் பெரும் பாலான கோரிக்கைகளை அரசு குழுவினர் ஏற்றுக்கொண்டனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை மார்ச் 12-ம் தேதி நடத்த இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப் பட்டது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிமுக தொழிற்சங்கத்தினர் தனியாகவும், மற்ற தொழிற் சங்கத்தினர் தனியாகவும் பேட்டி அளித்தனர். அப்போது, திடீரென இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். கல்வீச்சில் அங்கி ருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தன. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு பாது காப்புப் பணியில் ஈடுபட்டி ருந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

இதுதொடர்பாக போக்கு வரத்துத் துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சம்பள பிடித்தம், தற்காலிக ஊழி யர்கள் விவகாரம், ஷிப்ட் முறை, டி.ஏ. போன்ற நிர்வாக ரீதியான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளோம். அடுத்தகட்ட மாக ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சுவார்த்தையில் எந்த தொய் வும் ஏற்படவில்லை’’ என்றனர்.

தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம், பொருளாளர் கி.நடராஜன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது:

பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. முதல்கட்டமாக நிர்வாக ரீதியான பிரச்சினைகளை முன்வைத்து பேசினோம். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வாபஸ், சம்பளம் பிடித்தம் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக பிரச்சினைகளை தீர்க்க அரசு குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர். சேமநல நிதி, 1.4.2013க்கு பிறகு பணிக்கு சேர்ந்த ஊழியர்களை பென்ஷன் திட்டத்தில் சேர்ப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு தெரிவிப்பதாக கூறினர்.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தொழிற்சங்கத்தினருக்கு அரசு அதிகாரிகளுடன் எந்த பிரச்சி னையும் ஏற்படவில்லை. வெளியில் சிலர் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x