Published : 28 Mar 2015 09:40 AM
Last Updated : 28 Mar 2015 09:40 AM
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப்பதற்காக செங்கல் பட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தை மத்திய சுகாதாரத்துறை குழு விரைவில் ஆய்வு செய்ய வுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்காக நிலம் தேர்வு செய்யும் பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கி பட்டி, ஈரோடு மாவட்டத்தில் பெருந் துறை, மதுரை மாவட்டத்தில் தோப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் நிலத்தை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பட்டியலை அனுப்பி யுள்ளது. இதில், புதுக்கோட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 2 மாவட் டங்கள் மட்டுமே அரசின் விருப்பதில் உள்ளதாக கூறப்படுகிறது.
செங்கல்பட்டு பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக, மாவட்ட நிர்வாகம் மோசிவாக்கம், திருமணி, ஆலப்பாக்கம் ஆகிய 3 கிராமப் பகுதிகளில் உள்ள 48 ஏக்கர் புஞ்சை தரிசு நிலம், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான 128 ஏக்கர் நிலம், அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உட்பட மொத்தம் 186.62 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து, அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல்வர் மரு.ஐசக் கிறிஸ்டியன் மோசஸ் கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவ மனைக்காக தேர்வு செய்யப்பட் டுள்ள நிலத்தை, மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் வரும் வாரத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். அதற்கு முன்னதாக, தமிழக அரசின் சிறப்பு செயலர் செந்தில்குமார், சம்பந்தப்பட்ட நிலத்தை விரைவில் ஆய்வு செய்வார். இதனால், அந்த நிலப் பகுதிகளில் உள்ள புதர்களை அகற்றி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டுக்கு வர தரைவழி, ரயில்வழி மற்றும் வான்வழி என, அனைத்து விதமான போக்குவரத்து வசதிகள் உள்ளதால், எய்ம்ஸ் மருத்துவமனை இங்கு அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் நுட்பத்துடன் கூடிய மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமையும் என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT