Published : 19 Mar 2015 04:29 PM
Last Updated : 19 Mar 2015 04:29 PM

நீதிபதிகளுக்கு பாதுகாப்பு தேவை: நீதிபதிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை

அனைத்து நீதிபதிகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பரஞ்சோதி கூறியது: ''அனைத்து நீதிபதிகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். நீதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசு செலவில் கைத்துப்பாக்கி வழங்க வேண்டும்.

வேதாரண்யத்தில் நீதிபதி லதாவை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பரஞ்சோதி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x