Published : 02 Mar 2015 10:14 AM
Last Updated : 02 Mar 2015 10:14 AM
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு, பணிப்பாதுகாப்பு, ஓய்வூதியம், வாரிசுகளின் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நலத்திட்டங்களை பெறுவதற்கான பதிவுச் சான்றுகளை தொழிற்சங்க தலைவர்கள் உறுதி செய்த பின்னர் அவை நல வாரியங்களில் சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிராம நிர்வாக அதிகாரிகள் இதற்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. மேலும் திட்ட வரைவுகள்படி நிதி ஒதுக்காததால் இந்த நலத்திட்டங்களை வழங்க காலதாமதம் ஆகிறது. எனவே இந்த நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி வழங்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT