Published : 26 Mar 2015 02:30 PM
Last Updated : 26 Mar 2015 02:30 PM
பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகிறது. தேர்வில் காப்பி அடித்ததாக 2 பள்ளித் தேர்வர்கள் ; 24 தனித்தேர்வர்கள் என மொத்தம் 26 காப்பி அடித்ததாக சிக்கினர்.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில், "மார்ச்-ஏப்ரல் 2015-க்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் இன்று (26.03.2015) காலை 09.15 மணிக்கு துவங்கி பிற்பகல் 12.00 மணி வரை நடைபெற்றது.
இன்று நடைபெற்ற ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கை விவரம் மாவட்ட வாரியாக தொகுத்து வழங்கப்படுகிறது.
ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட மாணவர்களின் எண்ணிக்கை தேனி-5 தனித்தேர்வர்கள் பெரம்பலூர் 6-தனித்தேர்வர்கள்; விழுப்புரம் 3-தனித்தேர்வர்கள்; கடலூர் 1 பள்ளித்தேர்வர் மற்றும் 7-தனித்தேர்வர்கள் திருவண்ணாமலை 1- பள்ளித்தேர்வர் மற்றும் 1- தனித்தேர்வர்; வேலூர் 2- தனித்தேர்வர்கள்.
மொத்தம் 26 தேர்வர்கள் (2 பள்ளித் தேர்வர்கள் ; 24 தனித்தேர்வர்கள்) காப்பி அடித்ததாக சிக்கினர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT