Published : 17 Mar 2015 09:08 AM
Last Updated : 17 Mar 2015 09:08 AM

பாலியல் தொந்தரவு கொடுத்த காவல் உதவி ஆணையர் இடமாற்றம்

பெண் போலீஸுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில், காவல் உதவி ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சென்னையில் பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவருடன், காவல் உதவி ஆணையர் ஒருவர் செல்போனில் தவறாக பேசும் உரையாடல்கள் ‘வாட்ஸ்அப்’ மூலம் பரவி, கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வடசென்னை கூடுதல் ஆணையர் ரவிக்குமார் விசாரணை நடத்தினார்.

அதில், பெண் போலீஸுக்கு, காவல் உதவி ஆணையர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது உறுதிபட தெரிய வந்தது. இந்தத் தகவல் மாநகரக் காவல் ஆணையர் ஜார்ஜூக்குத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்தக் காவல் உதவி ஆணையர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x