Published : 29 Mar 2015 12:24 PM
Last Updated : 29 Mar 2015 12:24 PM
கொடைக்கானலில் தனியார் பள்ளியில் காப்பியடித்த 8 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக் காமல் கல்வித்துறை அதிகாரிகள் விடுவித்து விட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
பிளஸ் டூ இயற்பியல், பொருளா தாரம் தேர்வுகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 364 மாணவர்கள் தேர்வெழுதினர்.
பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காப்பியடித்த 2 மாணவர்கள் சிக்கினர். அவர்களை உடனடியாக தேர்வு மையத்தை விட்டு கல்வி அதிகாரிகள் வெளியேற்றினர். இதைத் தொடர்ந்து, கொடைக் கானல் தனியார் பள்ளி ஒன்றில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கு காப்பியடித்த 8 மாணவர்கள் பிடிபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கல்வித்துறை அதிகாரிகள் விட்டு விட்டதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிய திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷிணியை பலமுறை தொடர்பு கொண்டும், அவர் கைபேசியை எடுக்கவில்லை. திண்டுக்கல் மண்டல தேர்வுமையப் பொறுப்பாளர் இணை இயக்குநர் செல்வராஜிடம் கேட்டபோது, தனியார் பள்ளி மாணவர்களை தப்பவிட்டதாகக் கூறுவது தவறான தகவல். அரசுப் பள்ளியில் மட்டும் காப்பி அடித்ததாக 2 பேரைப் பிடித்தோம் என்றார்.
ஓசூரில் வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் வெளியான சம்பவத் தைத் தொடர்ந்து, தனியார் பள்ளி களில் கண்காணிப்பை அதிகப் படுத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால், தனியார் பள்ளிகள் மீதான கண்காணிப்பில் அதிகாரி கள் பாரபட்சமாக நடந்துகொள்வ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT