நடப்பு ஆண்டு முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

நடப்பு ஆண்டு முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
Updated on
1 min read

இந்த ஆண்டு முதல் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

2015-16-க்கான தமிழக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு:

இந்த ஆண்டு முதல் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதுவரை கடன் மற்றும் பங்கு மூலதன உதவியாக 3,105.82 கோடி ரூபாயை மாநில அரசு அளித்து தன்னுடைய பங்களிப்பை முழுமையாக நிறைவேற்றியுள்ளது.

2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இப்பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக 615.78 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு மத்திய அரசு கடனாகவும், பங்கு மூலதன உதவியாகவும் ஏற்கனவே அளிக்கவேண்டியுள்ள 1,498.74 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விரைவில் வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in