Published : 05 Mar 2015 09:27 AM
Last Updated : 05 Mar 2015 09:27 AM

குழந்தைகளுக்கான புதிய மணிபேக் பாலிசி திட்டம்: எல்.ஐ.சி. நிறுவனம் அறிமுகம்

குழந்தைகளுக்கான புதிய மணிபேக் பாலிசி உட்பட இரண்டு பாலிசிகளை எல்.ஐ.சி. நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, எல்.ஐ.சி. நிறுவனத்தின் மண்டல மேலாளர் த.சித்தார்த்தன், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது:

தனி நபர் காப்பீட்டின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வரை எல்.ஐ.சி.யின் தென்மண்டல அலுவலகங்கள் மூலம், 16.69 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்து, பிரீமியம் வருமானமாக ரூ.2,525 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்நிலையில் ஜீவன் சங்கம் மற்றும் குழந்தைகளுக்கான புதிய மணிபேக் பாலிசிகளை எல்.ஐ.சி அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜீவன் சங்கம் பாலிசி அறி முகமான நாளில் இருந்து 90 நாட்களுக்குள் முடிவடையும். அதாவது, வரும் ஜூன் முதல் தேதியுடன் முடிவடையும். 6 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். பாலிசி கால வரம்பு 12 ஆண்டுகள். செலுத்தப்படும் பிரீமியத்துக்கு பிரிவு 80-சியின் படி வரி விலக்கு உண்டு. மூன்று மாதத்துக்கு பின் கடன் வசதி உண்டு.

குழந்தைகளுக்கான புதிய மணிபேக் பாலிசியில் குழந்தை பிறந்த நாளில் இருந்து 12 வயது வரை சேரலாம். குறைந்தபட்சக் காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு லட்சம் ஆகும். காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம் குழந் தையின் 18, 20 மற்றும் 22 வயதுகளில் வழங்கப்படும். முதிர்வு காலத்தில் காப்பீட்டுத் தொகையின் 40 சதவீதம் மற்றும் போனஸ் ஆகியவை வழங்கப் படும். இவ்வாறு சித்தார்த்தன் கூறினார். இந்த சந்திப்பின் போது, எல்.ஐ.சி.யின் மண்டல மேலாளர் (மார்க்கெட்டிங்) ரவிச்சந்திரன், மண்டல மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) எஸ்.ஜான்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x