Published : 28 Mar 2015 09:17 AM
Last Updated : 28 Mar 2015 09:17 AM

பிளஸ் டூ வினாத்தாள் வெளியான விவகாரம்: ஓசூரில் மேலும் 4 ஆசிரியர்கள் கைது

ஓசூரில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ் டூ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மேலும் ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஓசூரில் தனியார் பள்ளியில் கடந்த 18-ம் தேதி நடந்த பிளஸ் டூ கணிதத் தேர்வின்போது, அறை கண்காணிப்பு பணியிலிருந்த விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் வினாத் தாளை வாட்ஸ்அப் மூலம் சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பி மாணவர்களுக்கு உதவி செய்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து 4 ஆசிரியர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை 2 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மேலும், 4 ஆசிரியர்களுக்குத் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக் கப்பட்டு விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் விமல்ராஜ், மைக்கேல்ராஜ், சஞ்சீவ், கவிதா ஆகியோரை கைது செய்தனர்.

இதனிடையே, முதலில் கைதான ஆசிரியர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல் போன்களில் இருந்த பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதையடுத்து அதனை மீட்க ஆய்வுக்கு அனுப்பி யுள்ளனர். அதுதொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர், மேலும் சில முக்கியப் புள்ளிகள் கைதாகக்கூடும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x