Last Updated : 02 May, 2014 08:24 AM

 

Published : 02 May 2014 08:24 AM
Last Updated : 02 May 2014 08:24 AM

மே 4-ல் கத்தரி வெயில் தொடக்கம்: 28-ம் தேதி வரை உக்கிரம் நீடிக்கும்

கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், கத்தரி வெயில் (அக்னி நட்சத்திரம்) வரும் 4-ம் தேதி தொடங்குகிறது. இதனால் வெயிலின் உக்கிரம் மே 28 வரை நீடிக்கும்.

கோடையில் கத்தரி வெயில் காலத்தில் வெயிலின் கொடுமை உச்சத்தில் இருப்பது வழக்கம். கத்தரி தொடங்குவதற்கு முன்பே கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. மே 4-ம் தேதி கத்தரி வெயில் தொடங்கியதும் வெயிலின் கடுமை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டில் பல மாவட்டங்களில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே வெயில் 100 டிகிரியை எட்டியது. ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. எனவே மே மாதத்தில் 112 டிகிரி வரை வெப்பம் உயர வாய்ப்பிருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x