Published : 16 Mar 2015 09:34 PM
Last Updated : 16 Mar 2015 09:34 PM

பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக: ஜி.கே.வாசன்

பார்வையற்ற பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பார்வையற்ற பட்டதாரிகள் போராடி வருகின்றனர்.

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்த வேண்டும், பார்வையற்றோர் பள்ளிகளில் பூர்த்தி செய்யாமல் இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு பணியிடங்களில் உரிய சலுகைகள் வழங்க வேண்டும்.

பார்வையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த காவல்துறை எடுத்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பார்வையற்ற மாணவர்களையும், பட்டதாரிகளையும் அழைத்து, மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களது நியாயமான கோரிக்கைகளை சிறப்புக் கவனம் கொண்டு தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நிறைவேற்ற வேண்டும்'' என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x